Sunday 28 March, 2010
அங்காடித்தெரு- என் பார்வையில்
இந்தப்படம் பேசுகிற., பரிமாற்றம் புரிகின்ற செய்திகள்; கண்கள் திரையை விட்டு பிரிந்தபின்னும் அகலாத அதிர்வுகள்.....
கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் தவிர்த்துவிட்டு பண்பியல்கலையில் இந்த சிறியபார்வை.
நாம் தினம்தினம் சாலைகளில் மரணத்தை உரசியபடிசெல்லும் போதும்., நொடிகளின் அதிர்ஷ்டத்தில் நாம் உயிரோடு இன்னும் பயணிக்கிறோம் ... ஆனால், அதிர்ஷ்டம் கைகொடுக்காத தருணங்களில்-அழகிய கூடுகளை சின்னாபின்னமாக கலைத்துவிட்டுப்போகும் விபத்துகளையும் ;
அதன் கோரப்பற்களில் தன் எதிர்காலங்களை பறிகொடுக்கும் தருணங்களில்., தன் சிறகுகளை முடக்கிக்கொண்டு தான் அடைக்கப்பட்ட கூண்டுக்குள் புதுவானம் அமைத்துக்கொள்ளும் சகமனிதர்களையும்;
காசு தேடுகிற வேகத்தில் மனிதம் மிதித்து பணமீட்டுகிற ஈரமற்ற வர்க்கதுவத்தையும்;
உலகை எதிர்கொள்ள இருக்கவேண்டிய பெண்மையின் தைரியத்தையும்;
வாழ வழி தேடும் மனிதர்களுக்கு உழைப்பின் வேர்களையும்:
நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கும் எண்ணற்ற நிஜங்களையும் ;
--பதிவு செய்துவிட்டு ஆழமான காதலையும் அதிர்வோடு பாடம் நடத்திவிட்டு வானை நோக்கி விலகி சென்று நமக்குள் ஒரு இருக்கை பிடிக்கிறது அங்காடித்தெரு.
ஆல்பம்... வெயில்....அங்காடித்தெரு என அழுத்தமாய் தன் சுவடுகளை பதித்து விட்டு சினிமாவின் பதிவேடுகளில் பயணம் செய்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
கைகோர்த்து நடந்திருக்கிறது கலையும் காமெராவும்...
வார்த்தைக்கு வார்த்தை மிளிர்கிறார் ஜெயமோகன்.
'அவள் அப்படியோன்றும் அழகில்லை' பாடல் காலம் தாண்டும்.
நகரம் நோக்கி நகரும் கிராமத்தை யதார்த்ததோடு படம் செய்த இயக்குனர். என்பார்வையில்... முடிவின்முக்கிய கதைக்களத்திற்கு அழைத்து செல்லும் பாடலில் சிறிது கவனம் தவறிவிட்டார்.
இதுபோல் படங்கள் தமிழ்சினிமாவின் வரங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல விமர்சனம். தமிழ் சினிமா வள்ர்ந்துகொண்டு இருக்கிறது என்பது உங்கள் வரிகள் உணர்த்துகின்றன. வாழ்த்துக்கள்
நானும் படம் பார்த்தேன், உங்கள் வார்த்தைகளில் என்னை எழுதி இருக்கிறீர்கள்
நன்றி மதுரை சரவணன்
நன்றி செந்தில்
Post a Comment