Saturday 17 July, 2010

காலப்பிழை..














உன்னைப் பார்த்தபின்
கிளியோபாட்ரா
கண்ணாடி பார்த்திருந்தால்
அந்தக் கோணல்
மூக்குக்காரியின்
கர்வம் செத்திருக்கும்..

நான் மாதவிகளின்
வீடுகளில்  இருந்தபோதும்...
கண்ணகியாய்
என் பெயர் சேர்த்தே உன் பெயர்
அலங்கரித்தாய்..

விமர்சித்த உன்
உறவுகளையும் உதறி
தாட்சாயணியாய் அவதரித்தாய்..

என் ஆத்திரங்களை
உன் பொறுமைகளால் துடைத்தாய் ..
என் வறுமையை
உன் பட்டினியால்
நம் பிள்ளைகளிடம் மறைத்தாய்..

நூற்றாண்டுகளின்
கால இடைவெளியில்
பலர் சரித்திரமானார்கள்...
நீ..!
என் அடுக்களையில்
அடைக்கலமானாய்...